ரூ. 2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி தொடக்கம் - வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படாததால் மக்கள் அவதி
May 15 2021 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி இன்று தொடங்கியது. டோக்கன்கள் முறையாக வழங்கப்படாததால் பலர் அவதியடைந்தனர்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் இம்மாதமே வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி இன்று தொடங்கியது. வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், ஒரு சில இடங்களில் டோக்கன்கள் சரிவர வழங்கப்படவில்லை. ரேசன் கடைகளுக்கே சென்று டோக்கன் வாங்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.