விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன
May 15 2021 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டவ்-தே புயல் காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக சாத்தூர் நான்கு வழிச்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் ஒரு சில மரங்கள் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்தன. மேலும், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுமார் 6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.