தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் 31,892 பேர் பாதிப்பு - வைரஸ் தொற்றால் மேலும் 288 பேர் பலியானதாக சுகாதாரத்துறை தகவல்
May 15 2021 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. 7 மாவட்டங்களில் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 31 ஆயிரத்து 892 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 377-ஆக அதிகரித்துவிட்டது.
சென்னையில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஒரேநாளில் 6 ஆயிரத்து 538 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3 ஆயிரத்து 197 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 225 பேருக்கும், திருவள்ளூரில் ஆயிரத்து 410 பேருக்கும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ஆயிரத்து 250 பேருக்கும், திருச்சியில் ஆயிரத்து 224 பேருக்கும், கன்னியாகுமரியில் ஆயிரத்து 25 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 68 பேர் எந்தவித இணை நோயும் இல்லாதவர்கள் ஆவர். தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 56 ஆக உயர்ந்துள்ளது.