திருப்பூரில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பிரத்யேக பேருந்து வடிவமைப்பு - ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஏற்பாடு
May 15 2021 10:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில், ஆக்சிஜன் தட்டுப்பாடால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, தற்காலிக ஏற்பாடாக சமூக அமைப்புகள் சார்பில் ஆக்சிஜன் பேருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க யங் இந்தியன்ஸ், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து ஆக்சிஜன் பேருந்தை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், இந்த ஆக்சிஜன் பேருந்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 6 பேருக்கு 10 லிட்டர் ஆக்சிஜன் செலுத்தும் வகையில் பேருந்தில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிலிண்டர்கள் மூலம் அல்லாமல் கான்சென்ட்டேட்டர் முறையில் காற்றிலிருந்து சுத்தமான முறையில் ஆக்சிஜனை பிரித்து பயன்படுத்துவதன் மூலம், 24 மணி நேரமும் இதனை பயன்படுத்த முடியுமென இதனை ஏற்பாடு செய்துள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.