கும்பகோணத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு
Apr 22 2021 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தில், பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல்களை, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.எம்.ரெங்கசாமி திறந்து வைத்தார். தாலுகா காவல் நிலையம், உச்சிபிள்ளையார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. கும்பகோணம் நகர அ.ம.மு.க செயலாளர் திரு.குருமூர்த்தி, பொறியாளர் பிரிவு துணைச் செயலாளர் திரு.பிரகதீஸ்வரன், மாவட்ட எம்.ஜி.ஆர் அணிச் செயலாளர் திரு.ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.