ஆக்சிஜன், ரெம்டெசிவரை பிற மாநிலங்களுக்கு அனுப்பிய விவகாரம் : தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்
Apr 22 2021 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்தை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ளபோதிலும் வெளி மாநிலங்களுக்கு அனுப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது எனவும் இந்து தமிழ் பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த செய்தியை அடிப்படையாக வைத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து இன்று பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக வழக்கை எடுக்கவில்லை எனவும், மற்ற மாநிலங்களில் உள்ள நிலை ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் நிலையை அறிய விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, இன்று பிற்பகலில் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.