சென்னையில் தங்க நகைகள் எனக் கூறி கவரிங் நகைகளை விற்க முயன்ற இருவர் கைது
Mar 9 2021 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் தங்க நகைகள் எனக் கூறி கவரிங் நகைகளை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெசன்ட் நகர், கடற்கரை அருகே இரண்டு இளைஞர்கள் குறைந்த விலைக்கு தங்க நகைகளை விற்பனை செய்வதாக சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தப்போது தங்க நகைகள் எனக் கூறி கவரிங் நகைகளை விற்பது தெரியவந்தது. இதையடுத்து, விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.