அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் சட்டப்பேவைத் தேர்தல் அறிக்கை வெளியீட்டு சிறப்பு பொதுக்கூட்டம் - வரும் 12ம் தேதி நடைபெறும் என தலைமைக்கழகம் அறிவிப்பு
Mar 9 2021 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வரும் 12-ம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு,
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சிறப்புரையாற்ற இருப்பதாகவும், தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் லட்சியக் கனவுகளை வென்றெடுக்கப் போராடும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு சிறப்புப் பொதுக்கூட்டம், வரும் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்ற இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித்தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழகச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், ஊராட்சி, கிளைக்கழகச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கழகத்தினர், பொதுமக்கள் என அனைவரும், கொரோனா கால வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியுடன் கலந்துகொள்ளுமாறு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.