திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் P.சிவக்குமார் மறைவுக்கு கழக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் இரங்கல்
Jan 25 2021 9:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு.P.சிவக்குமார் மறைவுக்கு கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி. தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திரு.P.சிவக்குமார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்திக் கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் திரு.டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், கோவை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச் செயலாளர் திரு.மதுசூதனின் தந்தை திரு. எம்.கோபால் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக கூறியுள்ளார். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் திரு.டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.