உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல் - திருப்பூர் அருகே விவசாயிகள் 6வது நாளாக போராட்டம்
Jan 25 2021 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, திருப்பூர் அருகே காங்கேயத்தில் விவசாயிகள் 6-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பட்சத்தில், தங்களது விவசாய நிலங்கள் மட்டுமின்றி, கால்நடைகளின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்பதை உணர்த்தும் வகையில் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.