தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சரி செய்யப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம்
Jan 25 2021 1:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சரி செய்யப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அங்கிருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த பின்னரும், அவர்களது பெயர்கள் இன்னமும் முழுமையாக வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்படாமல் உள்ளதாகக்கூறி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையேற்று, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.