புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் - செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்
Jan 18 2021 7:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளர் திரு.S.M. அருள் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அச்சிறுபாக்கம் பேரூர் கழகச் செயலாளர் திரு.M.சாந்திகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.