துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Jan 18 2021 7:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த நிலையில், குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி புகழேந்தி என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.