வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடத்த அனுமதி கோரிய வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மனுவை பரீசிலிக்க உத்தரவு
Jan 18 2021 7:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடத்த அனுமதி கோரிய வழக்கில், மனுதாரர் கோரிக்கை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்து வைத்தது. சிவகங்கை மாவட்டம் கள்ளம்பட்டி கிராமத்தில் வரும் 24-ம் தேதி, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில், அதிகாரிகள் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டனர்.