சென்னை சைதாப்பேட்டையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.ம.மு.க சார்பில் நிவாரண உதவி
Jan 18 2021 7:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை சைதாப்பேட்டையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. சைதாப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட 171-வது வட்டம், வெங்கடாபுரத்தில் உள்ள குடிசைப்பகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அ.ம.மு.க. சார்பில் நிவாரண நிதி மற்றும் அரிசி, காய்கறி, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.ஜி.செந்தமிழன், தென்சென்னை தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.வத்சலா, சைதை பகுதி மாணவர் அணிச் செயலாளர் திரு.வீ.வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.