செல்போன் கொள்ளையர்களை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு

Nov 28 2020 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

செல்போன் திருடர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று மடக்கி பிடித்த மாதவரம் காவல் உதவி ஆய்வாளரை 'நிஜ ஹீரோ' என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் பாராட்டியுள்ளார்.

சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திரு. ஆண்டிலின் ரமேஷ். அவர், நேற்று காலை பணி முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் ஒரு நபரிடம் செல்போன் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்வதை ரமேஷ் பார்த்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவர்களை தனது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மாத்தூர் அருகே மடக்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது உதவி ஆய்வாளர் ரமேஷை இருசக்‍கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் தரதரவென இழுத்துச் சென்றள்ளார். எனினும் அந்த நபரை உதவி ஆய்வாளர் ரமேஷ் மடக்கிப் பிடித்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சியைதான் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் அகர்வால் பதிவிட்டு உதவி ஆய்வாளரை பாராட்டியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00