தமிழகத்தில் 1,442 பேருக்கு கொரோனா தொற்று - சென்னையில் ஒரே நாளில் 392 பேருக்கு பாதிப்பு
Nov 27 2020 7:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் இன்று மேலும் ஆயிரத்து 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று ஆயிரத்து 442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில், கொரோனா வைரஸ் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 681-ஆக உயர்ந்தது.
சென்னையில் இன்று ஒரேநாளில் 392 பேர், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 191 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும், 1 ஆயிரத்து 494 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 54 ஆயிரத்து 826 பேர் குணமடைந்துள்ளனர்.