பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறப்பு - ஆற்றின் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வேண்டுகோள்
Nov 27 2020 6:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை மற்றும் பொன்னேரி பகுதியில், கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றின் அருகில் செல்ல வேண்டாம் எனவும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.