நிவர் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடக்கம் - வரும் 10-ம் தேதி வரை நடைபெறுமென அறிவிப்பு
Nov 27 2020 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிவர் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 30-ம் தேதி தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வந்த பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு, நிவர் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 24-ம் தேதியில் இருந்து வரும் 29-ம் தேதி வரை நடைபெறவிருந்த கலந்தாய்வு நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டது.