வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
Nov 27 2020 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், பின்னர் அது வரும் 30ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக டிசம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.