ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தி சக்ரா படத்தை வெளியிடலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Oct 21 2020 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தி, சக்ரா படத்தை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷால் நடித்த 'சக்ரா' படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை கோரி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 'ஆக்ஷன்' பட நஷ்டத்திற்கு, 8 கோடியே 30 லட்சத்தை விஷால் தங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டும் என டிரைடெண்ட் நிறுவனம் கோரியது. இப்பிரச்னைக்கு தீர்வு காண டிசம்பர் 23-க்குள் மத்தியஸ்தரை நியமிக்க டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.