ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி - தொல்பொருள் துறையினர் ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கை
Oct 21 2020 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதியில், தொல்பொருள் துறையினர் ஆய்வு நடத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள கண்மாயில், பராமரிப்பு வேலை நடைபெற்றபோது, முதுமக்கள் தாழி தென்பட்டுள்ளது. துளையுடன் கூடிய அந்த முதுமக்கள் தாழியில், எரிந்த நிலையில் எலும்புகள் இருந்துள்ளன. நல்லுக்குறிச்சி கிராமத்தை தொடர்ந்து, கீழக்கொடுமலூர் கிராமத்திலும் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளதால், தொல்பொருள் துறையினர் ஆய்வு நடத்த வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.