தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணிவரை அனைத்து கடைகளும் இயங்கலாம் - தமிழக அரசு அனுமதி
Oct 21 2020 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில், நாளைமுதல் காய்கறி, மளிகை, உணவகங்கள், தேநீர் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழகம் முழுவதும் முழுக் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர, மற்ற பகுதிகளில், ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காய்கறிக் கடைகள், மளிகைக்கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும், வணிக வளாகங்களும், நாளைமுதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.