பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
Oct 20 2020 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட சுமார் 30 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட உசிலம்பட்டியை சேர்ந்த அழகுராஜா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.