நீட் விடைத்தாள் மாறியுள்ளதாக மாணவர் புகார் - உரிய நடவடிக்கை எடுக்க மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு வலியுறுத்தல்
Oct 20 2020 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் விடைத்தாள் மாறியுள்ளதாக சென்னை மாணவர் விடுத்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியில் முதல் இடம் பெற்ற அக்சய் என்ற மாணவருக்கு NEET தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்களே கிடைத்துள்ளன. அவர் தனது விடைத்தாள்களை வாங்கிப் பார்த்தபோது அதில் எந்த விடையும் குறிக்கப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, தி.மு.க. எம்.பிக்கள் திருமதி.தமிழச்சி தங்க பாண்டியன், திரு.செந்தில்குமார் ஆகியோர், மத்திய கல்வித்துறை அமைச்சரிடமும், தேசிய தேர்வு முகமையையும் கோரிக்கை விடுத்துள்ளனர்.