கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டங்கள் - வரும் 2-ம் தேதி முதல் நடத்த தமிழக அரசு அனுமதி
Sep 30 2020 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டங்களை, வரும் 2-ம் தேதி முதல் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தியன்று நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி நிர்வாகம், செலவுகள், மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். இந்த நிலையில், கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிராமசபை கூட்டங்களை வரும் 2ம் தேதி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளியுடன் கிராம சபை கூட்டத்தை நடத்த, ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.