பேரையூர் இளைஞர் மர்மமான முறையில் மரணம் - போராட்டம் நடத்தக்கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி
Sep 28 2020 7:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் பேரையூரில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நியாயம் கோரி போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் சமூக இடைவெளியுடன் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென கூறப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி 144 தடை உத்தரவு உள்ளதால் போராட்டம் நடத்தக்கூடாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.