நாமக்கல் மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்
Sep 28 2020 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். கட்டணாச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் விவசாயி கணபதி என்பவருக்கு சொந்தமான பசு, முதல் பிரசவத்திலேயே 2 பெண் கன்றுகளை ஈன்றுள்ளது. இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்த கன்றுகளுக்கு லட்சுமி, ராமாயி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.