கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
Sep 25 2020 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் தடைசெய்யப்பட்ட 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மாவட்டம், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எஸ்.எச் காலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று சோதனையிட்ட தனிப்படை போலீசார் 600 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதனை கடைகளில் விற்க திட்டமிட்டிருந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலராம், முல்லாராம், மற்றும் மகேந்திரா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.