கிருஷ்ணகிரி கள்ளீயூர் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆடுகள்
Aug 4 2020 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி அருகே கள்ளீயூர் பகுதியில் உள்ள ஒரு ஆட்டுப்பட்டியில் ஆடுகள் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தன. மேலும் சில ஆடுகள் அங்கிருந்து காணாமல் போயின. அந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி திருப்பதி என்பவர், இவர் செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார். இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல, ஆட்டுப் பட்டிக்கு சென்று பார்த்தபோது, இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.