செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 187 பேருக்கு தொற்று உறுதியானது
Jul 11 2020 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 187 பேருக்கு தொற்று உறுதியானது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் அதிகபட்சமாக 242 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் இன்று மேலும் 187 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் செங்கல்பட்டு மாவடடத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 822 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152-ஆகவும் உள்ளது. 4 ஆயிரத்து 355 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.