சென்னையில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று - அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 2,553 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை
Jul 11 2020 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 383 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, 74 ஆயிரத்து 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 18 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 55 ஆயிரத்து 156 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், ஆயிரத்து 196 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 383 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகர் மண்டலத்தில் 2 ஆயிரத்து 75 பேருக்கும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 868 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராயபுரத்தில் ஆயிரத்து 476 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 464 பேரும். திரு.வி.க. நகரில் ஆயிரத்து 273 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
அடையாறில் ஆயிரத்து 191 பேருக்கும், அம்பத்தூரில் ஆயிரத்து 125 பேருக்கும், வளசரவாக்கத்தில் 990 பேருக்கும், திருவொற்றியூரில் 802 பேருக்கும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாதவரத்தில் 651 பேரும், ஆலந்தூரில் 551 பேரும், பெருங்குடியில் 508 பேரும், சோழிங்கநல்லூரில் 457 பேரும், மணலியில் 377 பேரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள சிகிச்சை பெற்று வருகின்றனர்.