திருச்சியில் கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை : மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 14 நாட்கள் முழு ஊரடங்கு
Jul 11 2020 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால், மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலைக்கோட்டை என்.எஸ்.பி சாலை, பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றுமுதல் 24ம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி ஆணையர் திரு. சிவசுப்ரமணியன் அறிவித்தார். இதையடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் மொத்த சில்லறை வியாபார கடைகள் மூடப்பட்டுள்ளன. மருந்துக் கடைகள், பால் கடைகள் மற்றும் சிறு காய்கறி கடைகள் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.