ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ள மின் கட்டணம் - வாழ்வாதாரம் மேலும் பாதிக்‍கும் என சிறு, குறு உற்பத்தியாளர்கள் கவலை

Jul 11 2020 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊரடங்கு காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணங்கள் அதிகரித்திருப்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிறு, குறு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆயத்த ஆடை உற்பத்திக்கு பெயர் பெற்ற திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்களாக இங்குள்ள நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டு பலரது வாழ்வாதாரமும் கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் சிறிய தளர்வுகளை அறிவித்த அரசு, சிறு குறு நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கலாம் என தெரிவித்தது. தற்போது வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்த அளவில் இருப்பதால் உற்பத்தியாளர்கள் முகக் கவசம், மருத்துவ ஆடைகள் உள்ளிட்ட ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் உற்பத்தியாளர்களை பாதிக்கக்கூடும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தினர் மின் பயன்பாட்டை கணக்கிட்டுள்ளதாக சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அதிகளவில் மின் கட்டணங்கள் வந்துள்ளதாகவும் சலுகை அடிப்படையில் மின் கட்டணத்தை அரசு வசூலிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00