அரசு தலைமைச்செயலகம் இன்றும் நாளையும் மூடல் - கொரோனா அச்சத்தால் கிருமி நாசினி பணிகளை மேற்கொள்வதற்காக நடவடிக்கை
Jul 11 2020 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் முயற்சியாக தமிழக அரசு தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைமைச்செயலக ஊழியர்கள் சிலருக்கு ஏற்கெனவே நோய்த்தொற்று உறுதியாகியிருக்கும் நிலையில், அங்கு கிருமி நாசினி பணிகளை மேற்கொள்ள வசதியாக இன்றும், நாளையும் தலைமைச்செயலகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கிருமி நாசினி தெளிப்பு பணிகள் நடைபெற்றிருக்கும் நிலையில், மீண்டும் அங்கு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.