தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று
Jul 9 2020 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் 64 பேர் பலியானதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 350 ஆக உயர்ந்தது. சென்னையில் நேற்று மட்டும் ஆயிரத்து 261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 500 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று மட்டும் 64 பேர் பலியானதை தொடர்ந்து, கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்து 700 ஆக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 46 ஆயிரத்து 480 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 51 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 74 ஆயிரத்து 167 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
தமிழக சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 379 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 300 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 273 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 160 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 141 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 133 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 115 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 106 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.