தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 8.13 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தகவல்
Jul 6 2020 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கடந்த 103 நாட்களில் ஊரடங்கை மீறியதாக, 8 லட்சத்து 13 ஆயிரத்து 877 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக, காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், 6 லட்சத்து 21 ஆயிரத்து 384 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியவர்களிடம் 17 கோடியே 21 லட்சத்து 16 ஆயிரத்து 131 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.