கன்னியாகுமரியில் ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 767 ஆக உயர்வு
Jul 6 2020 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர், காய்கறி சந்தையில் உள்ள 35 க்கும் மேற்பட்ட
வியாபாரிகள் உட்பட ஒரே நாளில் 80 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 434 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 323 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக உயர்ந்தது.