சென்னையில் கொரோனாவிற்கு மேலும் 28 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டில் புதிதாக 121 பேருக்கு நோய் தொற்று
Jul 6 2020 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரானா தாக்குதலுக்கு இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் 4 பேர் என இன்று மட்டும் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3 ஆயிரத்து 445 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 3 ஆயிரத்து 68 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 119 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.