மதுராந்தகத்தில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் : பறிமுதல் செய்யப்பட்ட லாரி எண் போலி என தகவல்
Jul 5 2020 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, போலி வாகன பதிவு எண் கொண்ட லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். முருங்கை என்ற இடத்தில், போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரைக் கண்டதும், லாரியை விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். லாரியை சோதனை செய்ததில், 6 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பிடிபட்டது. லாரியைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், போலி எண் கொண்ட வாகனம் என தெரியவந்தது.