மார்ஃபிங் ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் : பல கோடி ரூபாய் மோசடி - ராமநாதபுரத்தில் இருவர் கைது
Jul 3 2020 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மார்ஃபிங் செய்த ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கீழக்கரையைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமாரிடம் அலைபேசி வாயிலாக புகார் அளித்தார். அதில், தான் உட்பட பல பெண்களிடம் ஒரு கும்பல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டுவதாகவும், பணம் கேட்பதாகவும் தெரிவித்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் கீழக்கரையைச் சேர்ந்த முகமது மைதீன் தலைமையில் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. புதுச்சேரியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் நூர், சென்னையைச் சேர்த்ந பாசித் அலி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.