நாகர்கோவிலில் கொரோனா தனிமை முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென ராணுவ வீரர்கள் வேதனை
Jul 3 2020 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாகர்கோவிலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள், முகாமில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லையென குற்றஞ்சாட்டி உள்ளனர்.
வெளியூரிலிருந்து கன்னியாகுமரிக்கு வருபவர்கள்,
ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் பரிசோதனை முடிந்து,
நாகர்கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மஸ்கட் நாட்டில் இருந்தும் ராணுவத்திலிருந்தும் வந்தவர்கள், நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட எந்தவித வசதியும் இல்லையென்றும், குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் மிரட்டுவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள், வாட்ஸ்அப் மூலம் வேதனை தெரிவித்துள்ளனர்.