கிறிஸ்தவ மூதாட்டியின் உடலை இந்துக்கள் இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு
Jul 3 2020 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில், கிறிஸ்தவ மூதாட்டியின் உடலை, இந்துக்கள் இடுகாட்டில் புதைக்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. வேதாரண்யத்தை அடுத்துள்ள செண்பகராய நல்லூரைச் சேர்ந்த ஜெகதாம்பாள் என்பவர், வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில், உடலை அவரது உறவினர்கள், சவப்பெட்டியில் வைத்து, நாகையில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்த இந்து அமைப்புகள், உடலை அங்கு புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, ஜெகதாம்பாளின் உடல் கிறிஸ்தவர் கல்லறைதோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.