சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி
Jul 3 2020 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, 61 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 22 ஆயிரத்து 686 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 38 ஆயிரத்து 947 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 964 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 680 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகரில் மண்டலத்தில் 2 ஆயிரத்து 317 பேருக்கும், ராயபுரத்தில் 2 ஆயிரத்து 239 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேனாம்பேட்டையில் 1 ஆயிரத்து 965 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 856 பேரும், திரு.வி.க. நகரில் ஆயிரத்து 832 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 682 பேருக்கும், அம்பத்தூரில் ஆயிரத்து 259 பேருக்கும், திருவொற்றியூரில் ஆயிரத்து 176 பேருக்கும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 158 பேருக்கும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாதவரத்தில் 920 பேரும், ஆலந்தூரில் 872 பேரும், பெருங்குடியில் 821 பேரும், மணலியில் 513 பேரும், சோழிங்கநல்லூரில் 493 பேரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள சிகிச்சை பெற்று வருகின்றனர்.