குன்னூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு எருமை : வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை
Jun 1 2020 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டெருமையால் பொது மக்கள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்குள் காட்டெருமைகள் ஊடுருவுவது அண்மைக் காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சர்வ சாதாரணமாக அவை நடமாடி வருகின்றன. இந்நிலையில் வனப் பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் அம்பேத்கர் நகர் பகுதியில் ஒற்றை காட்டெருமை பகல் நேரங்களிலேயே வலம் வருகிறது. சாலைகளில் செல்லும் பொதுமக்களை காட்டெருமை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வனத்துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். உயிர்பலி ஏற்படும் முன் உடனடியாக, குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.