தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Jun 1 2020 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரையையொட்டிய பகுதிகளுக்கு வரும் 4ம் தேதிவரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.