கொரோனா பரவல் போன்ற கடினமான காலங்களில், காவலர்கள், தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் - பெருநகர சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள்
Jun 1 2020 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் போன்ற கடினமான காலங்களில், காவலர்கள், தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் காவலர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பி வருகின்றனர். அந்த வகையில், சென்னை காவல் கூடுதல் ஆணையர் திரு.தினகரன், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட 50 பேர், சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பினர். அவர்களை திரு. ஏ.கே. விஸ்வநாதன் சந்தித்து சான்றுகளை வழங்கி வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.