கொரோனா வைரசால் சென்னையில் 24 மணி நேரத்தில் 22 பேர் பலி - தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கையால் மக்கள் அச்சம்
May 29 2020 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனா வைரஸ் தாக்குதலால், கடந்த 24 மணி நேரத்தில், 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. சென்னையில் கடந்த 24 மட்டும் 22 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 2 பேரும், சென்னை ஐஐடி ஊழியர் ஒருவரும் கொரோனா தாக்குதலால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை டிஜிபி அலுவலகத்தில், மேலும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரசில் தாக்கம் அதிகரிப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.