கீழடி அருகே அகரம் அகழாய்வில், மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிப்பு - முதுமக்கள் வாழ்விடத்திற்கான ஆதாரம் கிடைத்ததாக தொல்லியல் துறையினர் தகவல்
May 29 2020 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே, அகரம் அகழாய்வில், முதுமக்கள் பயன்படுத்திய மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியின் தொடர்ச்சியாக, அகரம் மற்றும் மணலூர் பகுதிகளை மனிதர் வாழ்விடமாக கருதி, அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. அகரம் பகுதியில் சுமார் இரண்டு ஏக்கரில் குழிகள் தோண்டப்பட்டு, கடந்த சில நாட்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. நேற்றைய ஆய்வில், முதுமக்கள் பயன்படுத்திய மண்பாண்ட ஓடுகளை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இங்கு கிடைத்த பொருள்கள், இவ்விடம் மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததை உறுதி செய்துள்ளதாக தொல்லியில் துறையினர் தெரிவித்தனர்.