கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 18 ஆடுகள் மற்றும் மாடுகளை திருடிய 3 பேர் கைது
May 25 2020 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 18 ஆடுகள் மற்றும் மாடுகளை திருடிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். தென் தாமரைகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேச்சலுக்கு விடப்படும் ஆடுகள் மற்றும் மாடுகள் திருடு போய் வந்தன. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், சரலூரை சேர்ந்த முத்துக்குமார், கோகுல் ராமன் புதூரை சேர்ந்த தங்கதுரை ஆகிய மூவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.